PHOTOS : கொட்டும் மழைக்கு மத்தியில் கல்முனையில் கபன் துணி கவனயீர்ப்பு போராட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS : கொட்டும் மழைக்கு மத்தியில் கல்முனையில் கபன் துணி கவனயீர்ப்பு போராட்டம்!

ஜனாஸா எரிப்புக்கு எதிராக வெள்ளை துணி கவனயீர்ப்பு போராட்டம் கல்முனையில் கொட்டும் மழைக்கு மத்தியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனை தொகுதி முன்னாள் அமைப்பாளரும் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான வெஸ்டர் ஏ.எம்.றியாஸின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


$ads={2}

இதில் கிழக்கு தேச விடுதலை இயக்கத்தின் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக பொருளாளருமான வஃபா பாருக் உள்ளிட்ட அரசியல், சமூக, பொதுநல, ஊடக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

இப்போராட்டத்தில் ஜனாஸா எரிப்புக்கு எதிரான வாசகங்கள் மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டன.

ஜனாஸாவை அடக்க அனுமதி தா, நல்லடக்கம் எங்கள் அடிப்படை உரிமை அதை மறுப்பது சர்வாதிகாரம், விஞ்ஞானத்தை ஏற்று கொள் இனவாதத்தை கை விடு, இனவாதிகள் அல்ல நிபுணர்கள் சொல்வதை கேட்டு நட, இனவாதமாக இல்லாமல் விஞ்ஞான ரீதியாக செயற்படு போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் நேர காலத்துடன் போராட்டம் நிறைவுற்றது


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.