மாவட்ட எல்லைகளை கடப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாவட்ட எல்லைகளை கடப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும்!

மேல் மாகாணத்தில் அதிக எண்ணிக்கையான கொவிட்-19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதால் புத்தாண்டுக் காலத்தில் மக்கள் மாவட்ட எல்லைகளைக் கடப்பதைத் தடுக்க பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என இலங்கை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரியுள்ளது.

கொழும்பு மாநகர சபைப் பகுதிக்குள் மிகப்பெரும் எண்ணிக்கையான கொவிட்-19 நோயாளிகள் பதிவாகி வருவதாக பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கத் தலைவர் உபுல் ரோகண தெரிவித்தார்.
நோயாளர்கள் சமூகத்தில் அடையாளம் காண முடியாத வகையில் புழக்கத்தில் உள்ளனர். கம்பஹா, களுத்துறையிலும் இது போன்ற சூழ்நிலைகளே அறிக்கையிடப்படுகின்றன என்றார்.


$ads={2}

இதேவேளை பொதுச்சுகாதார சங்க செயலாளர் எம்.பாலசூரிய, கட்டுப்பாடுகளை விதிக்க முன் மூன்று வகை குழுக்கள் தொடர்பில் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

முதல் குழு மேல் மாகாணத்தில் பணி புரியும் பிற மாகாணங்களைச் சேர்ந்தவர்கள், அவர்கள் தற்போது வீடு திரும்பும் வழியில் உள்ளனர். இரண்டாவது குழுவினர் கிராமப்புறங்களிலிருந்து பொருட்கள், சேவைகளைப் பெறுவதற்காக மேல் மாகாணத்துக்கு வருகை தருகின்றனர்.

மூன்றாவது குழுவினர் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தலில் இருப்போர். அவர்கள் இலங்கையின் பிற பகுதிகளுக்கு உல்லாசப்பயணம் மேற்கொள்கின்றனர். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.