இலங்கையில் சுற்றுலாப் பயணிகளுக்கு முன்னுரிமை; முதலாவது அணிக்கு வர அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளுக்கு முன்னுரிமை; முதலாவது அணிக்கு வர அனுமதி!


விமான நிலையங்களின் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்த பின்னர் இலங்கைக்கு வருகை தரும் முதலாவது சுற்றுலாப் பயணிகள் அணிக்கு, நாட்டுக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.


ரஷ்ய அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


$ads={2}


இதனடிப்படையில் 200 பேர் கொண்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் எதிர்வரும் 26ஆம் திகதி கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானங்களுக்கு வருகை தரவுள்ளனர்.


இதனிடையே எதிர்வரும் 26ஆம் திகதி பின்னர் நாடு திரும்பும் இலங்கையர்கள், வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி நாடு திரும்ப முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் தர்மதாச குறிப்பிட்டுள்ளார்.


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல மாதங்களாக விமான நிலையங்களின் விசேட விமான சேவைகள் மாத்திரம் நடத்தப்பட்டு வருகின்றன. சாதாரண பயணிகள் விமான சேவைகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.