இலங்கையில் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய மன்னார் மாவட்டத்தின் இரு இடங்கள் பரிந்துரை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய மன்னார் மாவட்டத்தின் இரு இடங்கள் பரிந்துரை!


கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய, நிலத்தடி நீர் மட்டம் மிக ஆழத்தில் உள்ள இரு இடங்கள் தொடர்பில் பிரதமருக்கும் சுகாதார அமைச்சருக்கும் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.  


மன்னார் மாவட்டத்தின் மறிச்சிக்கட்டி, கிழக்கின் இறக்காமம் ஆகிய பகுதிகளே நிலத்தடி நீர் மட்டம் மிக ஆழத்தில் உள்ளதாக, தமது அமைச்சின் விசேட நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதுவே பிரதமருக்கும் சுகாதார அமைச்சர்க்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


$ads={2}


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன், இம்மாதத்தின் ஆரம்பத்தில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன்போது நிலத்தடி நீர்மட்டம் மிக ஆழத்தில் உள்ள இரு இடங்களை தேடி தமக்கு அறிவிக்குமாறு பிரதமர் நீர் வழங்கல் அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியிந்தார்.


அதன்படியே இந்தப் பிரதேசங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்விரு பிரதேசங்களிலும் 30 அடி ஆழத்தில் கூட நிலத்தடி நீர் கிடைக்காது என நீர் வழங்கல் அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.


-எம்.எப்.எம்.பஸீர்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.