தனக்கு கொரோனா தொற்றி பிள்ளைகளுக்கு கொரோனா பரவும் என்ற அச்சத்தில் தாய் தற்கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனக்கு கொரோனா தொற்றி பிள்ளைகளுக்கு கொரோனா பரவும் என்ற அச்சத்தில் தாய் தற்கொலை!

கொழும்பில் வயோதிபர்களுக்கு கொரோனா தொற்றும் என தொலைக்காட்சியில் அடிக்கடி பார்த்தமையினால் பெண் ஒருவர் தீயிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

அவருக்கு கொரோனா தொற்றி அது பிள்ளைகளுக்கும் பரவும் என அச்சத்தில் அவர் தீயிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என அவரது மகன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

வயோதிப பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டமை தொடர்பில் சாட்சி வழங்கும் போது மகன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


$ads={2}

அவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டவர் வத்தளை, ஹுனுபிட்டி, வெடிகந்த வீதியை சேர்ந்த 73 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

குறித்த தாய் தொலைக்காட்சி செய்திகளை தொடர்ந்து பார்த்து வந்துள்ளார்.

செய்தி பார்த்த பின்னர் தனக்கு உடல் வலிப்பதாக கூறியுள்ளார். பின்னர் அறைக்குள் சென்று கதவை மூடியுள்ளார்.

அங்கு தீயிட்டுக் கொண்ட தாயை காப்பாற்ற மகன் முயற்சித்த போதிலும், அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த தாய்க்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றவில்லை என உறுதியாகியுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.