மத்திய மாகாணத்தில் 424 தொற்றாளர்கள் - கண்டி அக்குரணையில் அதிகளவிலான தொற்றாளர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மத்திய மாகாணத்தில் 424 தொற்றாளர்கள் - கண்டி அக்குரணையில் அதிகளவிலான தொற்றாளர்கள்!

சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி மத்திய மாகாணத்தில் (05) இதுவரை 424 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

இதில் ஆகக் கூடுதலானவர்கள் கண்டி மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். கண்டியில் 359 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதேநேரம் நுவரெலியா மாவட்டத்தில் 172 பேர் பதிவாகியுள்ளனர். மாத்தளை மாவட்டத்தில் 53 பேரும் பதிவாகியுள்ளனர். 


$ads={2}

கண்டி மாவட்டத்தைப் பொறுத்தவரை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவு ரீதியாக அக்குறணைக் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 94 பேர் இனம் காணப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்த படியாக கண்டி மாநகர சபை பிரிவில் 68 பேர் இனம் காணப்பட்டுள்ளனர்.

ஏனைய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் அனைத்திலும் 50 ற்கும் குறைவான எண்ணிக்கையே பதிவாகியுள்ளன.

பாத்ததும்பரை - 28
ஹாரிஸ்பத்துவ - 18
யடிநுவர - 17
மெததும்பறை - 16
கம்பளை - 15 
ஹத்தரலியத்தை - 12

ஏனைய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 10 இற்கும் குறைவானவர்களே பதிவாகியுள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.