கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 146 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்றைய தினம் இதுவரையில் 469 கொரொனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 26,985 ஆக அதிகரித்துள்ளது.