பிரபல 'சீரியல் கில்லர்' ஒருவர் கொரோனா தொற்றால் உயிர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரபல 'சீரியல் கில்லர்' ஒருவர் கொரோனா தொற்றால் உயிர் பலி!


ஊடகங்களில் Yorkshire Ripper என பிரபலமான வடக்கு இங்கிலாந்து மக்களை நடு நடுங்க வைத்த தொடர் கொலையாளி கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.


இங்கிலாந்தில் ஊடகங்களில் யார்க்‌ஷையர் ரிப்பர் என எழுதப்பட்ட பீட்டர் வில்லியம் ஸட்கிலிப்பே 1975 முதல் 1980 வரையான காலகட்டத்தில் சுமார் 13 பெண்களை கொடூரமாக கொலை செய்துள்ளார்.


இவரது கொலைவெறித் தாக்குதலில் இருந்து 07 பெண்கள் உயிர் தப்பியதுடன், சிலர் பலத்த காயமடைந்தனர்.


$ads={2}


இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸாரின் தொடர் நடவடிக்கைகளுக்கு பின் 1981 ஆம் ஆண்டு ஸட்கிலிப்பே கைது செய்யப்பட்டார்.


பின் குற்றம் நிரூபணம் செய்யப்பட்டதையடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.


தற்போது 74 வயதாகும் பீட்டர் வில்லியம் ஸட்கிலிப்பே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.