ஊடகங்களில் Yorkshire Ripper என பிரபலமான வடக்கு இங்கிலாந்து மக்களை நடு நடுங்க வைத்த தொடர் கொலையாளி கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
இங்கிலாந்தில் ஊடகங்களில் யார்க்ஷையர் ரிப்பர் என எழுதப்பட்ட பீட்டர் வில்லியம் ஸட்கிலிப்பே 1975 முதல் 1980 வரையான காலகட்டத்தில் சுமார் 13 பெண்களை கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இவரது கொலைவெறித் தாக்குதலில் இருந்து 07 பெண்கள் உயிர் தப்பியதுடன், சிலர் பலத்த காயமடைந்தனர்.
$ads={2}
இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸாரின் தொடர் நடவடிக்கைகளுக்கு பின் 1981 ஆம் ஆண்டு ஸட்கிலிப்பே கைது செய்யப்பட்டார்.
பின் குற்றம் நிரூபணம் செய்யப்பட்டதையடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது 74 வயதாகும் பீட்டர் வில்லியம் ஸட்கிலிப்பே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.