பாடசாலை சென்ற இரு மாணவர்களின் பெற்றோருக்கு கொரோனா! PCR இன் பின்னரே என்ன செய்வதென்று தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலை சென்ற இரு மாணவர்களின் பெற்றோருக்கு கொரோனா! PCR இன் பின்னரே என்ன செய்வதென்று தீர்மானம்!


இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்ந்த அனைத்து பாடசாலைகளும் நேற்றைய தினம் கல்வி நடவடிக்கைக்காக மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், பாடசாலைக்கு வந்த ஒரே குடும்பத்ததை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் பெற்றோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான வைத்தியர் வெனுர கே. சிங்காரச்சி தெரிவித்துள்ளார்.


அம்பலங்கொட திலகபுர பிரதேசத்தை சேர்ந்த பாதுகாப்பு பிரிவு உறுப்பினர் ஒருவர் வீட்டிற்கு வந்த நிலையில், வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தப்பட்டதாக அம்பலங்கொட பொது சுகாதார பரிசோதர் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் நேற்றைய தினம் பாடசாலைகள் திறக்கப்பட்டமையால் அவரது பிள்ளைகள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு பிரிவு உறுப்பினர் நேற்று பிற்பகல் திடீர் சுகயீனமடைந்தமையினால் அவர் இது தொடர்பில் பிரதேச பொது சுகாதார பரிசோதகரிடம் தெரிவித்துள்ளார்.


$ads={2}


அதற்கமைய அவர் உடனடியாக அம்பியுலன்ஸ் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை உறுதியாகியுள்ள நிலையில் அவரது மனைவிக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கும் கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளது.


அதற்கமைய அம்பலங்கொட பிரதேசத்தின் பிரதான பாடசாலை இரண்டில் 9 மற்றும் 11 வகுப்புகளில் கல்வி கற்கும் இந்த பிள்ளைகள் இருவரும் நேற்று பாடசாலைக்கு சென்றுள்ளனர்.


இதனால் குறித்த இரண்டு பிள்ளைகளும் கற்ற இரண்டு வகுப்பறைகளின் மாணவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான வைத்தியர் வெனுர கே.சிங்காரச்சி தெரிவித்துள்ளார்.


நாளைய தினம் இந்த இரு மாணவர்களுக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் அதன் முடிவுகளுக்கமையவே மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.