சற்றுமுன்னர் மேலும் 96 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
இந்நிலையில், இன்று மாத்திரம் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 419 ஆகும் என இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
அத்துடன் இதுவரை காலத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 18,402 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 5,746 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.12,587 பேர் தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர்.
இதேவேளை, இலங்கைக்குள் மேலும் மூன்று கொரோனா இறப்புகள் இன்று பதிவாகியுள்ளன. கொழும்பு 12, கொழும்பு 13 மற்றும் கந்தானையை சேர்ந்த மூவரே இவ்வாறு இறந்துள்ளனர்.
$ads={2}
இவர்களில் 74 வயதையுடைய பெண் ஒருவரும், 48 மற்றும் 70 வயதுடைய ஆண்களுமே ஆவர்.
இதனையடுத்து நாட்டில் கொரோனா இறப்புக்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது