நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 214 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
$ads={2}
இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 16,405 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 293 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 11,324ஆக அதிகரித்துள்ளது.