110 மாணவர்களைக் கொண்ட சிறிய பாடசாலையான கேகாலை - தும்மலதெனிய முஸ்லிம் வித்தியாலயத்தின் சுமார் 08 வருடங்களுக்கு பிறகு ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் எட்டு மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி அதில் செல்வி மொஹம்மட் சிராஜ் ஹாஜரா என்ற மாணவி 163 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.
மேலும் போற்றத்தக்க விடயம் என்னவென்றால் நூற்றுக்கு மேற்பட்ட புள்ளிகளை 05 மாணவர்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர்களை ஊக்குவித்த இப்பாடசாலை அதிபர் S.L.M பிர்தௌஸ் அவர்களுக்கும் வகுப்பாசிரியரான A. வாயிஷா பேகம் ஆசிரியைக்கும் தரம் 01 முதல் 05 வரை கற்பித்த ஆசிரியர்கள் உட்பட பாடசாலை ஆசிரியர் குழாத்துக்கும் ஊர்மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
$ads={2}
தகவல்: மொஹமட் நிஸ்வான்