இலங்கையில் கொரோனா தொற்றினால் 21 ஆவது மரணம் பதிவு இன்று பதிவாகியுள்ளது.
இவருக்கு சுவாசம் சார்ந்த நோய் மற்றும் இரத்த அழுத்தம் என்பன இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 40 வயதுடைய மஹர பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது.
குறித்த நபருக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது பெறப்பட்ட முதல் PCR பரிசோதனையில் கொரோனா தொற்று இருக்கவில்லை.
எனினும் நேற்று அவர் உயிரிழந்த பின் நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.