விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படமான சீறும் புலி விரைவில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கிறார். உனக்குள் நான், லைட்மேன், நீலம் போன்ற படங்களை இயக்கிய வெங்கடேஷ் குமார். ஜி இந்த படத்தை இயக்குகிறார். ஸ்டுடியோ 18 நிறுவனம் தயாரிக்கிறது.
$ads={2}
இப்படம் 2019ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதை இரண்டு பாகங்களாக எடுக்கப்போவதாக முன்னரே வெங்கட்டேஷ் குமார் அறிவித்திருந்தார்.
பிரபாகரனின் ஆரம்பக்காலங்கள் எப்படி இருந்தது என்பது குறித்தும், ஒரு மாணவர் போராளியாக இருந்து பின்னர் எப்படி தலைவராக மாறுகிறார் என்பது குறித்தும் முதல் பாகத்திலும், தமிழீழம் போராட்டம் குறித்து இரண்டாவது பாகத்திலும் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
கடந்த 2009ஆம் ஆண்டு பிரபாகரன் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டார்.
LTTE ஒரு பயங்கரவாத அமைப்பாக ஐரோப்பிய ஒன்றியம், கனடா, அமெரிக்க மற்றும் இந்தியா உட்ப்ட 32 நாடுகளால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ( Times of India)
பிரபாகரனின் ஆரம்பக்காலங்கள் எப்படி இருந்தது என்பது குறித்தும், ஒரு மாணவர் போராளியாக இருந்து பின்னர் எப்படி தலைவராக மாறுகிறார் என்பது குறித்தும் முதல் பாகத்திலும், தமிழீழம் போராட்டம் குறித்து இரண்டாவது பாகத்திலும் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
கடந்த 2009ஆம் ஆண்டு பிரபாகரன் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டார்.
LTTE ஒரு பயங்கரவாத அமைப்பாக ஐரோப்பிய ஒன்றியம், கனடா, அமெரிக்க மற்றும் இந்தியா உட்ப்ட 32 நாடுகளால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ( Times of India)