காலி பிராண்டிக்ஸ் நிறுவனத்திற்கும் கொரோனா பரவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காலி பிராண்டிக்ஸ் நிறுவனத்திற்கும் கொரோனா பரவல்!


காலி, கொக்கல பகுதியில் உள்ள பிராண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும் யுவதியொருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் வேணுரா கே.சிங்கராச்சி தெரிவித்தார்.

ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த இரண்டு யுவதிகள் காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகளுடன் காணப்பட்டதையடுத்து, சிகிச்சைக்காக தொழிற்சாலையின் மருத்துவ பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


$ads={2}

பி.சி.ஆர் சோதனையில் யுவதி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், நேற்று இரவு (29) கொரோனா சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட நிலையில், மற்ற யுவதிக்கு இரண்டாவது பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

காலி, ரத்கம பகுதியில் வசிக்கும் இரண்டு யுவதிகளும் பிராண்டிக்ஸ் நிறுவனத்தின் பேருந்திலேயே பயணம் செய்வதாகவும், அவர்களுடன் சுமார் 75-100 ஊழியர்கள் பேருந்தில் பயணித்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து யுவதிகளின் நெருங்கிய கூட்டாளிகள் உட்பட 62 பேர் நேற்று இரவு பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும் தொழிற்சாலையில் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 62 ஊழியர்கள் பொது சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையின் கீழ் சிறப்பு பொலிஸ் பாதுகாப்பின் கீழ் தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், விசாரணை அறிக்கைகள் வரும் வரை தனிமைப்படுத்தப்பட்டதாகவும் வைத்தியர் வேணுரா கே. சிங்கராச்சி தெரிவித்தார்.

இதேவேளை கொக்கலவில் உள்ள இந்த பிராண்டிக்ஸ் தொழிற்சாலையில் கிட்டத்தட்ட 1500 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.