பிரான்ஸின் தேவாலய தாக்குதல் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் அல்ல!! கனடிய பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ பேட்டி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரான்ஸின் தேவாலய தாக்குதல் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் அல்ல!! கனடிய பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ பேட்டி!


நேற்று முன்தினம் (29) பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகர் தேவலாயத்தில் நடை பெற்ற தாக்குதலில் மூவர் கொலை செய்யப்பட்டனர்.


இந்த தாக்குதலில் துனிஸ் நாட்டை சார்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தொடர்ப்பில் இருந்தது கண்டறியப்பட்டது.


இந்த தகவல் வெளிவந்ததும் துனிஸ் நாடு அந்த நபருக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தாமதமின்றி உடனடியாக அறிவித்தது.


அது போன்று பிரான்ஸ் இஸ்லாமிக் கவுன்சிலும் அந்த தாக்குதலை உடனடியாக கண்டித்து இதற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை என்று கூறியது.


இதற்கு பிறகும் பிரான்ஸ் நாட்டின் தலைவர் இம்மானுவேல் மேக்ரோன் நைஸ் நகர தாக்குதல் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் என்று அறிவித்திருந்தார்.


$ads={2}


அவர் கூறிய அனைத்தையும் உலக நாடுகளின் பல ஊடகங்களும் அப்படியே சொல்லி வருகின்றன.


இந்நிலையில், தலைவர் இம்மானுவேல் மேக்ரோனுக்கு பதிலடி தரும் விதத்தில் கனடிய பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ அவர்களின் பேட்டி அமைந்துள்ளது.


"நைஸ் தேவாலய தாக்குதல் பயங்கரவாத தாக்குதலே தவிர இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் அல்ல, அந்த தாக்குதலை நடத்தியவர் இஸ்லாத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவனும் இல்லை. எனவே இஸ்லாமிய பயங்கரவாதம் என நைஸ் தேவாலய தாக்குதலில் பயன்படுத்தப்படுவதை கண்டிக்கிறேன்." என கனடிய பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.