ரிஷாத் பதியூதினுக்கு அடைக்கலம் அளித்த தம்பதியினர் கைது!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரிஷாத் பதியூதினுக்கு அடைக்கலம் அளித்த தம்பதியினர் கைது!!!


முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு அடைக்கலம் அளித்த குற்றச்சாட்டுக்காக தெஹிவளை எபனேசர் பிளேஸில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் தம்பதியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


$ads={2}

வைத்தியர் ஒருவரும் அவரது மனைவியுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள பொலிஸார் வட்டாரங்கள், அவர்கள் ரிஷாத் பதியூதீனின் நெருங்கிய நண்பர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் இன்று அதிகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டார்.

இந் நிலையில் ரிஷாத் தெஹிவளைக்கு வருவதற்கு முன்னர், எம்.பி. பதியுதீன் தஞ்சம் கோரிய ஏனைய இடங்கள் குறித்த விவரங்களைப் பெற பொலிஸார் சிறப்பு விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.