கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணிபுரியும் நபரொருவருக்கு கொரோனா உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணிபுரியும் நபரொருவருக்கு கொரோனா உறுதி!


கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் துப்புரப் பிரிவின் பெண் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுகாதார அலுவலர் டாக்டர் சந்திகா பந்தரா விக்ரமசூரியா தெரிவித்துள்ளார்.

சிலாபத்தில் வசிக்கும் 50 வயதான பெண்ணொருவரே கொரோனா இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று மாலை குறித்த பெண் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். சோதனை முடிவுகளில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் குறித்த பெண் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய தொற்று நோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய நபர்களிடம் பி.சி.ஆர். சோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் அவரது குடும்ப உறுப்பினர்களும் தற்போது சுகாதாரப் பிரிவினரின் கண்காணப்பில் உள்ளனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.