அரச அறிவுறுத்தலை மீறிய கல்வி நிறுவனங்கள்; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரச அறிவுறுத்தலை மீறிய கல்வி நிறுவனங்கள்; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தனியார் கல்வி நிலையங்களையும் மூடுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. 


இந்நிலையில் இந்த அறிவித்தலை மீறி வவுனியாவில் இயங்கிய தனியார் கல்வி நிறுவனங்கள் மீது பொலிஸார் அதிரடி நடவடிக்கையினை மேற்கொண்டனர்.


வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தின் உத்திரவிற்கமைய இன்று (12) மாலை வவுனியா வைரவ புளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையங்களை பார்வையிட்ட பொலிசார் அரச அதிபரின் உத்தரவை மீறி இயங்கிய மூன்று கல்வி நிலையங்களை மூடுமாறு பணித்ததுடன் அனுமதி பெறாது திறக்கப்பட்டமை குறித்து எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.


$ads={2}


இதன்போது தனியார் கல்வி நிலைய உரிமையாளர் ஒருவர் பொலிசாரிடம் தெரிவிக்கும் போது,


"நாம் இதுவரை பூட்டியிருந்தோம். இன்று தான் திறந்தோம் பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் சந்தேகம் கேட்க வந்ததால் திறந்தோம் அத்துடன் நான் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர் எனக்கு நிலமை தெரியும். இங்கு பிரச்சனை இல்லை என்பதால் திறந்தோம். ஊரடங்கு போட்டால் நாம் உதவி செய்வோம்." என்றார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.