![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgLjIo84THmjcYfBirJ1bxBEb5ojL9_hKTrMuMr2uWvFzMG6c8dsoM8mPCwNECwQ_iL88tVCN6-81Kj3B4E3idkmR3suoztY2xlmX15-scJOwKugRnMw_g4ToG9UmxnLrxssQYj2txKbA/s16000/zahran+hashim+yazhnews.jpg)
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 4 வழக்குகளை கொண்ட 64 பேரையும் இன்று (05) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.ஏ றிஸ்வான் இவர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கடந்த 21 ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் காத்தான்குடியை சேர்ந்த 63 பேர் கைது செய்யப்பட்டனர் இவர்களில் 05 பேர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் 58 பேர் தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த குண்டுத்தாக்குதல் தொடர்பாக வெவ்வேறு 4 வழக்கு இலக்கங்களை கொண்ட சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், சியோன் தேவாலய தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட ஆசாத்தின் தாயார்; சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரிக்கு பிரயாணம் செய்ய பஸ் வண்டி ஆசனப்பதிவு செய்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 06 பேர் உட்பட 64 பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டிலுள்ள 04 சிறைகளில் வைக்கப்பட்டிருக்கும் இவர்களை கடந்த பெப்ரவரி ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக இவர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படாமல் இவர்களின் வழக்கு திகதிகளில் நீதவான் காணொளி மூலம் தொடர்ந்து வழக்குகளை நடாத்தி அவர்கள் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்தனர்.
$ads={2}
இந்நிலையில், சிறைகளில் இருந்து இவர்களை கடந்த 06 மாதத்தின் பின்னர் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இதில் வெவ்வேறு 04 வழக்கு இலக்கங்களை கொண்ட பிணையில் விடுவிக்கப்பட்ட 05 பேர் உட்பட 69 பேரையும் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.சி.ஏ றிஸ்வான் முன்னிலையில் ஆஜராகிய நிலையில் 64 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார் .