கொரோனா தொற்று பரம்பலையடுத்து கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்காக உலர் உணவு நிவாரணப் பொதிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ளது.
ஒவ்வொரு பொதியும் பத்தாயிரம் ரூபா பெறுமதியானதெனவும், இவற்றில் 14 நாட்களுக்கு தேவையான உலர் உணவும், பழ வகைகளும் உள்ளடங்கி இருக்கின்றன. இதற்காக 68 இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
$ads={2}
அதேவேளை, முடக்க நிலை காரணமாக ஒரு மாத காலத்திற்கு மேலாக வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடதக்கது.