ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி என விளங்கும் நௌபர் மௌலவி PCol முன் ஆஜர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி என விளங்கும் நௌபர் மௌலவி PCol முன் ஆஜர்!


ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரி எனத் தெரிவிக்கப்படும் தேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ) இயக்கத்தின் கோட்பாட்டாளர் நௌபர் மௌலவி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவின் முன்னிலையில் பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக ஆஜரானார்.


நௌபர் மௌலவி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் இன்று (16) காலை 9.30 மணி முதல் சுமார் 6 மணி நேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.


கடந்த ஜூலை 28ஆம் திகதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கையில் மத்திய புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, நௌபர் மௌலவியே பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரி என்பதை வெளிப்படுத்தினார்.


மத்திய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த தெரிவிக்கையில், தேசிய தௌஹீத் ஜமாஅத் இயக்கத்தின் நிறுவனர் சஹ்ரான் ஹாசிம் அல்ல மாறாக நௌபர் மௌலவியே இருந்ததாகக் கூறினார்.


நௌபர் மௌலவி 19 வருடங்களாக கட்டார் நாட்டில் வசித்ததுடன் வெவ்வேறு சர்வதேச குழுக்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு வந்ததாகவும் தமிமீழ விடுதலைப் புலிகளின் கோட்பாட்டாளர் அன்ரன் பாலசிங்கத்தைப் போன்ற பாத்திரத்தை வகித்ததாகவும் அவர் மேலும் கூறினார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.