இம்முறை பல்கழலைக்கழகங்களுக்கு மேலதிக 8,000 மாணவர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இம்முறை பல்கழலைக்கழகங்களுக்கு மேலதிக 8,000 மாணவர்கள்!

இம்முறை மேலதிகமாக 8,000 மாணவர்கள் இலங்கையில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.


இதன்படி, இம்முறை இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு 38,000 க்கும் அதிகமான மாணவர்களை உள்ளீர்க்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 


அனைத்துப் பல்கலைக்கழக உப வேந்தர்களுடன் நேற்று (11) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இதற்கான இணக்கம் எட்டப்பட்டதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது


இதனடிப்படையில், இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 38,000 அதிக மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே தெரிவித்துள்ளார்.


இதேநேரம், 2019ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகளின் பிரகாரம், வெட்டுப்புள்ளிகளை வௌியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


இம்முறை மருத்துவ பீடத்திற்கு மாத்திரம் 369 மாணவர்கள் மேலதிகமாக இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.