ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு உதவியவர்களுக்கு மரணதண்டனை விதிக்கவேண்டும்- சஜித்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு உதவியவர்களுக்கு மரணதண்டனை விதிக்கவேண்டும்- சஜித்


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு உதவியவர்களுக்கு மரணதண்டனை விதிக்கவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச கருத்து வெளியிட்டுள்ளார்.


அம்பலாங்கொடையில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.


போதைப்பொருள் கடத்தல் பயங்கரவாத நடவடிக்கைகளில்ஈடுபடுபவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


19 ஆவது திருத்தத்தினை பலப்படுத்தக்கூடிய 19 Plus மூலம் ஸ்திரமான தேசிய பாதுகாப்பினை உருவாக்குவதே தனது நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தடுப்பதற்கு அவ்வேளை தெளிவான தலைமைத்துவம் இருக்கவில்லை என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் அதன் பின்னர் எடுக்க்பபட்ட நடவடிக்கைகளும் பின்னடைவை சந்தித்தன என குறிப்பிட்டுள்ளார்.


அனைத்து பிரஜைகளும் கடந்த காலத்திலிருந்து பாடங்களை கற்று வலுவான தேசிய பாதுகாப்பு பொறிமுறையை உருவாக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.