இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட மிக முக்கிய செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட மிக முக்கிய செய்தி!


இலங்கையின் பிரதான நிதி நிறுவனமான இலங்கை வங்கிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் போலி தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை வங்கியின் உள்ளக பிரச்சினை காரணமாக வங்கி நிர்வாகம் மற்றும் வர்த்தக நடவடிக்கைககளுக்கு தடை ஏற்படுவதாக கூறி இலங்கை வங்கி மற்றும் அதன் அதிகாரிகளுக்கு எதிராக சமூக வலைத்தளங்கள் ஊடாக சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை வங்கி கடந்த 6 மாதத்தினுள் 6.9 பில்லியன் ரூபாய் இலாபம் பெற்று அரச வங்கி என்ற ரீதியில் அதிக இலாபத்தை பதிவு செய்துள்ளது.

அரசாங்கம் செயற்படுத்திய 4 வீத வர்த்தகத்தை மீளவும் கட்டியெழுப்பும் கடன் யோசனை முறையின் கீழ் இலங்கை வங்கியினால் 22 பில்லியன் கடன் வழங்கிய நாட்டின் முதல் வங்கியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவிய காலப்பகுதியில் அரசாங்க கொள்கை மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு இலங்கை வங்கி முக்கிய பங்கு வகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் இலங்கை வங்கி தொடர்பிலான போலித் தகவல்களை நம்ப வேண்டாம் என வங்கி தெரிவித்துள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.