இலங்கையில் கொரோனா தொற்றின் முழு விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் கொரோனா தொற்றின் முழு விபரம்!


நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3,345 ஆக அதிகரித்துள்ளது.


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் இன்று (25) அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.


ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து வருகைத்தந்த இருவர், கட்டாரிலிருந்து வருகைத்தந்த 06 பேர், உக்ரைனிலிருந்து வருகைத்தந்த மூவருக்கும் மற்றும் அல்பைனிலிருந்து வருகைத்தந்த ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,158 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந் நிலையில், 36 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.


$ads={2}


அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 174 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்காக 278,145 PCR பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.