SLBFE யின் நலன்புரி பிரிவுகளின் அதிகாரிகளை அழைத்து வர நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

SLBFE யின் நலன்புரி பிரிவுகளின் அதிகாரிகளை அழைத்து வர நடவடிக்கை!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வெளிநாட்டு தூதுரக அலுவலகங்களில் முன்னெடுத்து செல்லப்படும் நலன்புரி பிரிவுகளின் மேலதிக அதிகாரிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வருமானம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன் காரணமாக செலவினங்களை குறைத்து கொள்ளும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பணியகத்தின் செலவினங்களை குறைத்து கொள்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டதாகவும் அந்த குழுவின் பரிந்துரைக்கு அமையவே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வெளிநாட்டு தூதுரக அலுவலகங்களின் நலன்புரி பிரிவுகளில் 125 அதிகாரிகள் சேவையாற்றுகின்றனர்.

அந்த அதிகாரிகளின் 40 பேரை மாத்திரம் சேவைக்கு அமர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த தெரிவித்துள்ளார்
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.