யாழ். பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய இந்தியாவுடன் உடன்படிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யாழ். பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய இந்தியாவுடன் உடன்படிக்கை!

யாழ். பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசாங்கத்துடன் கைச்சாத்திட எதிர்பார்த்துள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகருக்கும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கும் இடையில் நேற்று (25) சுற்றுலாத்துறை அமைச்சில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 2 வார காலப்பகுதிக்குள் இந்த உடன்படிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை சட்டமூலத்துக்கான நடவடிக்கை தற்பொழுது பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தவுடன் இரு தரப்பினருக்கு இடையிலான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் இதன்போது  தெரிவித்தார்
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.