கொழும்பு சிறைச்சாலைகளின் பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரை ஈடுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த உத்தியோப்பூர்வ வேண்டுக்கோளை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய பாதுகாப்பு அமைச்சிடம் முன்வைத்துள்ளார்.
$ads={1}
வெலிக்கடை , மெகசின் , கொழும்பு மற்றும் ரிமான்ட் சிறைச்சாலைகளுக்கும் பெண்கள் சிறைப் பிரிவுகளிலும் இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் புஸ்ஸ மற்றும் அகுனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படை ஈடுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.