களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பெரும் தொகையான சிகரெட்டுகள் இன்று (20) சுங்க அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டு, கொழும்பில் உள்ள இலங்கை புகையிலை நிறுவன வளாகத்தில் அழிக்கப்பட்டன.
குறித்த இந்த சரக்குத் தொகை சுங்க இடர் மேலாண்மை பிரிவில் கடந்த 2019 ஆகஸ்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி சுமார் 35 மில்லியன் எனவும், களஞ்சியசாலையில் சுமார் 650,000 சிகரெட்டுக்கள் சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட பரிசோதனையின் போது மீட்கப்பட்டு அழிக்கப்பட்டன.