இந்நிலையில் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி ஆரம்பித்து செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி நிறைவு செய்வதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிறைவேற்று குழு தீர்மானித்துள்ளது.
குறித்த போட்டிகள் RPS விளையாட்டரங்கு, ரங்கிரி ரபுல விளையாட்டரங்கு, பல்லேகலை சர்வேதச விளையாட்டரங்கு மற்று சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்குகளில் இடம்பெறவுள்ளது.
போட்டிக்கு 5 அணிகள் இணைத்து கொள்ளப்பட்டுள்ள நிலையில் அணிகளாக கொழும்பு, தம்புள்ளை, கண்டி, காலி மற்றும் யாழ்ப்பாணம் என பெயரிடப்பட்டுள்ளது.
குறித்த போட்டியில் இலங்கை அணி வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் அடங்களாக 70 பேர் பெயரிடப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.