ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சி தகைமையை கூட பெறாது! -S. B திஸ்ஸநாயக்க

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சி தகைமையை கூட பெறாது! -S. B திஸ்ஸநாயக்க

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியானது பிரதான எதிர்க்கட்சி தகைமையைக் கூட பெறமுடியாத நிலை ஏற்படும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் S.B திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொத்மலை பகுதியில் இன்று (18) இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தின் பின் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

குருணாகல் சம்பவம் தொடர்பில் எனக்கு தெரியாது. ஆனால், தொல்பொருள் பெறுமதிமிக்க இடமொன்று உடைக்கப்பட்டிருக்குமானால் அது தவறு.

ஐக்கிய தேசியக்கட்சி புதுவழியை நோக்கி பயணிக்க முயற்சித்தாலும் அதற்கு கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க ஒரு போதும் இடமளிக்கமாட்டார்.

ஐக்கிய தேசியக்கட்சி இன்று இரண்டாக பிளவுபட்டுள்ளது. சஜித்துடன் 80 வீதமானோரும், ரணில் பக்கம் 20 வீதமானோரும் உள்ளனர். எனவே, ஐக்கிய தேசியக்கட்சியால் மீண்டெழ முடியாது.

அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சிகள் பெறும் ஆசனங்களை விட, சஜித் அணி குறைவாகவே பெறும். பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்த்தை கூட பெறமுடியாமல் போகும்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்துகொண்டு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு வதை கொடுத்தனர். அப்படியானவர்கள் இன்று எம் பக்கம் வந்துள்ளனர். இதனால் தான் சிறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.