நிபுண ரணவக்கவின் மாத்தறையில் நேற்று (11) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆரம்பிக்கும் போது பசில் ராஜபக்ஷவுடன் நிபுண ரணவக்க இரவு பகல் பாராது அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். கட்சியை ஆரம்பிப்பதில் அவர் பசில் ராஜபக்ஷவுக்கு பக்கபலமாக இருந்தார்.
இதனால், குறிப்பாக பசில் ராஜபக்ஷவின் யோசனைக்கு அமைய, தற்போது நாட்டுக்கு இளம் அரசியல் தலைவர்கள் தேவை என்பதால், நிபுண ரணவக்கவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பை வழங்கினோம். எனது மருமகன்களில் மிகவும் நேர்மையான மருமகன் நிபுண என்றே கூற வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு அணிகளில் செயற்பாடுகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் கருத்து வெளியிட்டுள்ள மகிந்த ராஜபக்ஷ, அரசியல் வரலாற்றில் முதல் முறையாக எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துடன் போட்டியிடாது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையமான சிறிகொத்தவை கைப்பற்றும் போட்டியில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார்.