நாட்டிற்கு இளம் அரசியல் தலைவர்கள் தேவை என்பதாலே எனது தங்கையின் மகனை இம்முறை போட்டியிட வைத்தேன். பிரதமர் தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டிற்கு இளம் அரசியல் தலைவர்கள் தேவை என்பதாலே எனது தங்கையின் மகனை இம்முறை போட்டியிட வைத்தேன். பிரதமர் தெரிவிப்பு!

nipuna ranawaka with mahinda
தனது தங்கையின் மகனான நிபுண ரணவக்க எனது தங்கையின் மகன் என்பதற்காக அவருக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பை வழங்கவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நிபுண ரணவக்கவின் மாத்தறையில் நேற்று (11) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆரம்பிக்கும் போது பசில் ராஜபக்ஷவுடன் நிபுண ரணவக்க இரவு பகல் பாராது அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். கட்சியை ஆரம்பிப்பதில் அவர் பசில் ராஜபக்ஷவுக்கு பக்கபலமாக இருந்தார்.

இதனால், குறிப்பாக பசில் ராஜபக்ஷவின் யோசனைக்கு அமைய, தற்போது நாட்டுக்கு இளம் அரசியல் தலைவர்கள் தேவை என்பதால், நிபுண ரணவக்கவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பை வழங்கினோம். எனது மருமகன்களில் மிகவும் நேர்மையான மருமகன் நிபுண என்றே கூற வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு அணிகளில் செயற்பாடுகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் கருத்து வெளியிட்டுள்ள மகிந்த ராஜபக்ஷ, அரசியல் வரலாற்றில் முதல் முறையாக எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துடன் போட்டியிடாது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையமான சிறிகொத்தவை கைப்பற்றும் போட்டியில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.