இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 2,704 ஆக உயர்ந்துள்ளது. இன்று இரவு 11.45 மணி வரையில் 07 தொற்றாளிகள் இனங்காணப்பட்டனர்.
இதில் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் தொற்றாளிகளுடன் நெருங்கிய 05 பேர் அடங்குகின்றனர். மற்றும் ஒருவர் பிலிப்பைன்ஸில் இருந்து இலங்கைக்கு வந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுவரை வைத்தியசாலைகளில் 670 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 2,023 பேர் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 05 கடற்படை சிப்பாய்கள் மாத்திரம் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த கடற்படை சிப்பாய்களின் எண்ணிக்கை 901 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் இதுவரை 11 பேர் உயிர்பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் தொற்றாளிகளுடன் நெருங்கிய 05 பேர் அடங்குகின்றனர். மற்றும் ஒருவர் பிலிப்பைன்ஸில் இருந்து இலங்கைக்கு வந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுவரை வைத்தியசாலைகளில் 670 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 2,023 பேர் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 05 கடற்படை சிப்பாய்கள் மாத்திரம் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த கடற்படை சிப்பாய்களின் எண்ணிக்கை 901 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் இதுவரை 11 பேர் உயிர்பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.