அத்தோடு தமது கோரிக்கைகளுக்கான பதிலை வழங்குவதில் சுகாதார அமைச்சு அசமந்தப்போக்குடன் செயற்படுவதால், பிரச்சினை மேலும் பெரிதாவதற்கு முன்னர்
ஜனாதிபதி இவ்விடயத்தில் நேரடியாகத் தலையிட வேண்டும் என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
இந்தப் பிரச்சினை மேலும் பெரிதாவதற்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலையிட்டு எமக்கான தீர்வை வழங்க வேண்டும். எமக்கு வேறு எந்தவொரு சங்கத்துடனும் எவ்வித முரண்பாடும் இல்லை என்பதைத் தெரியப்படுத்துகின்றோம்.
கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்காக பொது சுகாதாரப் பரிசோதகர்களால் முன்னெடுக்கப்படும் அர்ப்பணிப்பான சேவையில் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில்
சதிச் செயல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மக்கள் மத்தியிலும் பொது சுகாதார பரிசோதகர்களின் சேவையை பாதிப்படையச் செய்வதற்கான வேலைத்திட்டங்களும்
முன்னெடுக்கப்படுகின்றன" - என்றுள்ளது.