அத்துடன் ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக் கொள்ளும் அடிப்படையில் மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளளார்.
மாணவர்களின் திறமை மற்றும் திறன் தொடர்பிலான தகவல்களை இலகுவாக அறிந்துக் கொள்ள கூடிய வகையில் அனைத்து மாணவர்களுக்கும் விசேட இலக்கம் ஒன்று அடையாளப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.
விடுமுறை வழங்கப்பட்டுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. எனினும் வாரத்தின் 5 நாட்களுக்குள் 5,10,11,12,13 ஆகிய வகுப்பு மாணவர்கள் மாத்திரமே அழைக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.