முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முதலாம் தரத்தில் இணைத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை 35 - 40 வரை அதிகரிப்பதற்கு சட்ட ரீதியான அனுமதி கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக் கொள்ளும் அடிப்படையில் மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளளார்.
$ads={1}
அதற்கமைய பொதுத் தேர்தலின் பின்னர் அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களின் திறமை மற்றும் திறன் தொடர்பிலான தகவல்களை இலகுவாக அறிந்துக் கொள்ள கூடிய வகையில் அனைத்து மாணவர்களுக்கும் விசேட இலக்கம் ஒன்று அடையாளப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.
$ads={2}
இந்த இலக்கம் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நிறைவடையும் வரை செல்லுப்படியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுமுறை வழங்கப்பட்டுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. எனினும் வாரத்தின் 5 நாட்களுக்குள் 5,10,11,12,13 ஆகிய வகுப்பு மாணவர்கள் மாத்திரமே அழைக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.