கொழும்பில் 3000 நபர்களுக்கு எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பில் 3000 நபர்களுக்கு எச்சரிக்கை!

மேல் மாகாணத்தில் முகக் கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக 3000 க்கும் மேற்பட்டவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று அதிகாலை 5 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போதே 3061 பேருக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
$ads={1}
அதன்படி முகக் கவசம் அணியத் தவறிய 2093 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய 968 பேருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் மேல் மாகாணத்தில் 1200 க்கும் மேற்பட்டவர்கள் முகக் கவசம் அணியத் தவறியமைக்காக சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் உள்ளனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.