தவறுதலாக கீழே விழுந்த 18 மாத குழந்தை; கின்னியாவில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தவறுதலாக கீழே விழுந்த 18 மாத குழந்தை; கின்னியாவில் சம்பவம்!

தனது அக்காவின் கையில் இருந்து தவறி விழுந்த 18 மாத குழந்தை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் இதனை தெரிவித்தார்.

இச்சம்பவம் நேற்று (18) மாலை கிண்ணியா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கிண்ணியா - சூரங்கள் பகுதியைச் சேர்ந்த 18 மாத குழந்தைக்கே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. 

மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

18 மாத குழந்தையை, தன்னுடைய 12 வயது அக்கா தூக்கி விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக கீழே விழுந்து மயக்கமுற்ற நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

இதனையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அக்குழந்தையின் தலையில் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு நேற்று இரவு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.