
வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் இதனை தெரிவித்தார்.
இச்சம்பவம் நேற்று (18) மாலை கிண்ணியா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கிண்ணியா - சூரங்கள் பகுதியைச் சேர்ந்த 18 மாத குழந்தைக்கே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
18 மாத குழந்தையை, தன்னுடைய 12 வயது அக்கா தூக்கி விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக கீழே விழுந்து மயக்கமுற்ற நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.
இதனையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அக்குழந்தையின் தலையில் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு நேற்று இரவு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.