நான் தோல்வியை ஏற்றுக்கொள்ள தயார்! -ட்ரம்ப் தெரிவிப்பு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நான் தோல்வியை ஏற்றுக்கொள்ள தயார்! -ட்ரம்ப் தெரிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஒருவேளை நான் தோல்வியடைந்தால் அமைதியாக வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிவிடுவேன் என அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகிறார். இதன் காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் சாடி வருகின்றனர்.

இந்நிலையில், அண்மையில் டிரம்ப் பற்றி பேசிய ஜோ பிடன், “வரும் ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்தால் அவர் ஒப்புக்கொள்ள மாட்டார், வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேரமாட்டார். அவரால் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, தேர்தலில் மோசடி செய்ய முயற்சி செய்வார்.” என கூறியிருந்தார்.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது இது தொடர்பாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த டிரம்ப், “வரும் தேர்தலில் ஒருவேளை நான் தோல்வியடைந்தால், அமைதியாக வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறி வேறு வேலைகளைப் பார்க்கச் சென்றுவிடுவேன். நான் செய்யவேண்டிய விடயங்கள் நிறைய இருக்கின்றன.” எனத் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.