அரசியலமைப்புப் பேரவையின் கூட்டம் அதன் தலைவரும், எட்டாவது பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தலைமையில் நாளை (24) மாலை 06 மணிக்கு சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் கலந்து கொள்ளவிருப்பதாக அதன் செயலாளரும், பாராளுமன்ற செயலாளர் நாயகமுமான தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினர்கள் இருவருக்கு ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்புவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்மொழியப்பட்டுள்ள பெயர்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.