விக்கினேஸ்வரனின் செயல் அசல் பிரபாகரனை போல் உள்ளது. -சரத் வீரசேகர

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விக்கினேஸ்வரனின் செயல் அசல் பிரபாகரனை போல் உள்ளது. -சரத் வீரசேகர

பிரபாகரன் 30 வருட யுத்தத்தால் மேற்கொள்ள முடியாமல் போனதையே விக்கினேஸ்வரனும் ரத்னஜீவன் ஹூலும் பிரேரணைகள் மூலம் மேற்கொள்ள முயற்சிக்கின்றனர். 

விக்கினேஸ்வரன் ஆளுநராக இருக்கும் போது சிங்கள மக்களுக்கு எதிரான 27 பிரேரணைகளை அங்கீகரித்திக்கின்றார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கொழும்பு மாவட்ட வேட்பாளர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

வடக்கில் சுய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் ஆளுநர் விக்கினேஸ்வரன் தெரிவிக்கின்றார். அதேபோல் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ரத்னஜீவன் ஹூல் இந்த நாட்டை சமஷ்டி முறைமைக்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்திருக்கின்றார். இவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பதற்கு இவர்களுக்கு என்ன உரிமை இக்கின்றது. இவர்கள் இருவரும் இந்த நாட்டை துண்டாட முயற்சிக்கின்றனர்.

அன்று பிரபாகரனுக்கு 30 வருட யுத்தத்தால் செய்ய முடியாமல் போனதையை தற்போது இவர்கள் இருவரும் முயற்சிக்கின்றனர். நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டபோது இந்த கருத்துக்கள் ஒவ்வொன்றாக அவர்கள் முன்வைத்தனர். அதனைத்தான் நல்லாட்சி அரசாங்கம் புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் முன்வைத்தது.

மேலும்,  விக்கினேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் காலம் வந்திருக்கின்றது. அத்துடன் கருணா அம்மான் தெரிவித்திருந்த கருத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். யுத்தத்தை வெற்றிகொள்ள கருணாவிடமிருந்தும் குறிப்பிடத்தக்க ஒத்துழைப்பு கிடைத்தது. என்றாலும் அதற்காக தற்போது அவர் தெரிவித்திருக்கும் கருத்தை நியாயப்படுத்த முடியாது என்றார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.