பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

மொனராகலை, இத்தேகடுவ பிரதேசத்தில் கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

கொலை சம்பவம் ஒன்று தொடர்பில் குறித்த நபர் பொலிஸாரால் தேடுப்பட்டு வந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

மொணராகலை, இத்தேகடுவ பிரதேசத்தில் சந்தேகநபர் ,தலைமறைவாகி இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அவரை கைது செய்வதற்கு சென்ற போது சந்தேகநபர் பொலிஸார் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் படுகாயமடைந்த நிலையில் சிறிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் இருந்து கைது குண்டு, துப்பாக்கி மற்றும் கத்தி ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.