கொலை சம்பவம் ஒன்று தொடர்பில் குறித்த நபர் பொலிஸாரால் தேடுப்பட்டு வந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
மொணராகலை, இத்தேகடுவ பிரதேசத்தில் சந்தேகநபர் ,தலைமறைவாகி இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அவரை கைது செய்வதற்கு சென்ற போது சந்தேகநபர் பொலிஸார் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்தில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் படுகாயமடைந்த நிலையில் சிறிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் இருந்து கைது குண்டு, துப்பாக்கி மற்றும் கத்தி ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.