மாணவர்களின்றி பாடசாலைகள் நாளை ஆரம்பம் !

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாணவர்களின்றி பாடசாலைகள் நாளை ஆரம்பம் !

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள், 105 நாட்களுக்கு பின்னர் நாளைய தினம் திறக்கப்பட உள்ளன.

நான்கு கட்டங்களாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சர் டளஸ் அழகபெரும மற்றும் அமைச்சின் அதிகாரிகள் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தனர்.

இதனடிப்படையில் பாடசாலைகள் நாளைய தினம் ஆரம்பிக்கப்பட உள்ளதுடன் மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகை தர மாட்டார்கள்.


பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் நாளைய தினம் பாடசாலைகளுக்கு வரவழைக்கப்பட உள்ளதுடன், இவர்களின் தலையீட்டில் ஒரு வாரம் பாடசாலைகளில் துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதன் பின்னர் மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைப்பது குறித்து எதிர்வரும் 6 ஆம் திகதி தீர்மானிக்கப்பட உள்ளது.

அரச பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் விதத்திலேயே கத்தோலிக்க பாடசாலைகளையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய கத்தோலிக்க கல்விப் பணிப்பாளர் ஐவன் பெரேரா தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.