இலங்கையில் இன்று புதிதாக மூன்று கொரோனா தொற்று உறுதி! மொத்த எண்ணிக்கை 1880 ஆகா உயர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் இன்று புதிதாக மூன்று கொரோனா தொற்று உறுதி! மொத்த எண்ணிக்கை 1880 ஆகா உயர்வு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை இன்று (12) இரவு 11.45 மணியளவில் 1,880 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மூவர் இனங்காணப்பட்டுள்ளார்.

இதற்கமைய இது வரையில் நாட்டில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,880 ஆக அதிகரித்துள்ளதோடு, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,196 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேலை தற்போதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 673 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும்நிலையில், 57 பேர் தொடர்ந்தும் வைத்தியகண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் நாட்டில் இதுவரை 11 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.