நாடு முழுவதும் நேற்றிரவு 10 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நாளை முதல் எதிர்வரும் 03ஆம் திகதி வரையில் அனைத்து மாவட்டங்களிலும் இரவு 10 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 04 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமுலாக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு முன்னதாக அறிவித்திருந்தது.
பின்னர் ஜுன் 04 மற்றும் 05ஆம் திகதிகளில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.
ஜுன் 06ஆம் திகதி முதல் சகல மாவட்டங்களிலும் மீள் அறிவித்தல் வரையில் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 04 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கும் இடையிலான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது