'பொதுமக்களின் சொத்தை சூறையாடிய அனைத்து முன்னாள் அமைச்சர்களும், விரைவில் சிறையில் அடைக்கப்படுவார்கள்!' -கெஹெலிய

advertise here on top
Join YazhNews WhatsApp Community

'பொதுமக்களின் சொத்தை சூறையாடிய அனைத்து முன்னாள் அமைச்சர்களும், விரைவில் சிறையில் அடைக்கப்படுவார்கள்!' -கெஹெலிய

நல்லாட்சி அரசு என்ற பெயரில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சி செய்து நிதியைச் சூறையாடிய அனைத்து முன்னாள் அமைச்சர்களும் விரைவில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என ராஜபக்ஷ அரசின் பேச்சாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

“நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நல்லாட்சி அரசின் அமைச்சர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. குற்றவாளிகள் அனைவருக்கும் தக்க தண்டனையை நீதித்துறை வழங்கும்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி உட்பட நல்லாட்சி அரசில் இடம்பெற்ற சகல மோசடிகளுடன் தொடர்புபட்டவர்கள் அனைவரும் சிறைக்குச் செல்வார்கள். எக்காரணம் கொண்டும் குற்றவாளிகள் தப்பிப்பிழைக்க மாட்டார்கள்.

ஜனாதிபதித் தேர்தலின்போது வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நாம் நிறைவேற்றியே தீருவோம். இதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் உறுதியாக இருக்கின்றார்கள்” என்றார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.