இன்று (21) மேலும் 19 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் 434 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 112 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் இருப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 20 பேர் இன்று குணமடைந்த நிலையில், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 604 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 09 பேர் உயிர் பலியாகியுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.