இன்றைய தினம் 19 பேருக்கு கொரோனா தொற்று! மொத்த எண்ணிக்கை 1047 ஆக உயர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்றைய தினம் 19 பேருக்கு கொரோனா தொற்று! மொத்த எண்ணிக்கை 1047 ஆக உயர்வு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1047 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று (21) மேலும் 19 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 434 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 112 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் இருப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 20 பேர் இன்று குணமடைந்த நிலையில், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 604 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 09 பேர் உயிர் பலியாகியுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.