ஒரே நாளில் 14,617 இராணுவ சிப்பாய்களுக்கு பதவி உயர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒரே நாளில் 14,617 இராணுவ சிப்பாய்களுக்கு பதவி உயர்வு!

தேசிய போர் வீரர்கள் நினைவேந்தலுக்கு இணையாக 14,617 இராணுவ சிப்பாய்களுக்கு உத்தியோகபூர்வ பதவி உயர்வு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்வு எதிர்வரும் செவ்வாய் (19) பத்தரமுல்லை, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தேசிய போர் வீரர்களின் நினைவிடத்தில் நடைபெற ஏற்பாடுகள்செய்யப்பட்டு வருகின்றன.

நாட்டின் தற்போது நிலைமையை மிக்க சவாலுடன் எதிர்நோக்கும் இராணுவப்படை சிப்பாய்களை கௌரவிக்கும் முகமாகவே இந்த பதவி உயர்வுகள் பாதுகாப்புப் படைத் தலைவரும், இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பரிந்துரையின் கீழ் ஏட்பாடு செய்யப்பட்டுள்ளது.

இராணுவ வரலாற்றில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான பதவி உயர்வுகள் இலங்கை இராணுவ படைப்பிரிவின் அனைத்து படைப்பிரிவுகளுக்கும் மே 18 முதல் அமல்படுத்தப்பட்டு தேசிய போர் வீரர்களின் நினைவு தினத்துடன் பதவிப்பிரமான நிகழ்வு இடபெறவுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 10ஆம் திகதி 70ஆவது இராணுவ ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், 210 அதிகாரிகள் உட்பட 7210 இராணுவ வீரர்கள் அடங்கிய குழுக்கு அவர்களது அடுத்த கட்ட பதவிக்கு உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.