இந்நிகழ்வு எதிர்வரும் செவ்வாய் (19) பத்தரமுல்லை, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தேசிய போர் வீரர்களின் நினைவிடத்தில் நடைபெற ஏற்பாடுகள்செய்யப்பட்டு வருகின்றன.
நாட்டின் தற்போது நிலைமையை மிக்க சவாலுடன் எதிர்நோக்கும் இராணுவப்படை சிப்பாய்களை கௌரவிக்கும் முகமாகவே இந்த பதவி உயர்வுகள் பாதுகாப்புப் படைத் தலைவரும், இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பரிந்துரையின் கீழ் ஏட்பாடு செய்யப்பட்டுள்ளது.
இராணுவ வரலாற்றில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான பதவி உயர்வுகள் இலங்கை இராணுவ படைப்பிரிவின் அனைத்து படைப்பிரிவுகளுக்கும் மே 18 முதல் அமல்படுத்தப்பட்டு தேசிய போர் வீரர்களின் நினைவு தினத்துடன் பதவிப்பிரமான நிகழ்வு இடபெறவுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 10ஆம் திகதி 70ஆவது இராணுவ ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், 210 அதிகாரிகள் உட்பட 7210 இராணுவ வீரர்கள் அடங்கிய குழுக்கு அவர்களது அடுத்த கட்ட பதவிக்கு உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.