பொலிசாரிடமிருந்து தப்பியோடி யானையிடம் மாட்டிக்கொண்ட நபர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொலிசாரிடமிருந்து தப்பியோடி யானையிடம் மாட்டிக்கொண்ட நபர்!

சட்டவிரோதமாக இரத்தினக் கல் அகழ்வில் ஈடுபட்டதன் பின்னணியில் பொலிசாரின் சுற்றிவளைப்பிலிருந்து தப்பியோடிய நபர் ஒருவர் யானையிடம் சிக்கித் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் நாஉலயில் இடம்பெற்றுள்ளது.

நாஉல, அம்பன்கஹ வனப்பகுதியருகில் மொரகஹகந்த பிரதேசத்தில் இவ்வாறு சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வு இடம்பெறுவதாக பொலிசாருக்குக் கிடைத்த தகவலின் பின்னணியில் இச்சுற்றி வளைப்பு இடம்பெற்றதாகவும் இதன் போது அகழ்வில் ஈடுபட்டிருந்த குழுவினர் தப்பியோடியதாகவும் அதில் ஒருவரே இவ்வாறு யானைத் தாக்குதலுக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொன்கஹவல பகுதியைச் சேர்ந்த 47 வயது மடே முதியன்சலாகே திலகரத்ன எனும் நபரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-sonakar.com

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.